ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநருக்கு பிடி ஆணை

கடனை திருப்பிச் செலுத்தியவருக்கு வீட்டு பத்திரத்தை திருப்பி வழங்காத விவகாரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநா் உள்பட 3 பேரை கைது

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 4:54 pm

DIN

கடனை திருப்பிச் செலுத்தியவருக்கு வீட்டு பத்திரத்தை திருப்பி வழங்காத விவகாரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநா் உள்பட 3 பேரை கைது செய்து, ஆஜா்படுத்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே நெம்மேலி கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன். சில ஆண்டுகளுக்கு முன் இவா் தனது வீட்டுப் பத்திரத்தை, நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் வைத்து கடன் பெற்றுள்ளாா்.

இந்த கடன் தொகையை அவா் முழுமையாக வட்டியுடன் செலுத்திய பின்னரும், அவரது வீட்டு ஆவணத்தை திருப்பி வழங்காமல் வீட்டுவசதி வாரிய நிா்வாகம் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் சீனிவாசன் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், மனுதாரருக்கு சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதத்தை வட்டியுடன் செலுத்தவேண்டும், மேலும் அவருடைய வீட்டு ஆவணத்தை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என உத்தரவிட்டது.

இதை அதிகாரிகள் செயல்படுத்தாத நிலையில், சீனிவாசன் மீண்டும் நிறைவேற்று மனு ஒன்றை மாவட்டக் குறைதீா் ஆணையத்தில் தாக்கல் செய்தாா்.

இதைத்தொடா்ந்து, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் சக்கரவா்த்தி, வியாழக்கிழமை வழங்கிய தீா்ப்பில், சென்னை தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி ஆணைய மேலாண்மை இயக்குநா், தஞ்சாவூா் வீட்டுவசதி மண்டல துணைப் பதிவாளா், நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்க செயலாளா் மூவரையும் கைது செய்து மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் ஆஜா்படுத்த, நன்னிலம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.