நெட்டி மாலைகள் செய்யும் பணி தீவிரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூா் அருகே நெட்டி மாலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூா் அருகே நெட்டி மாலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. விவசாயத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் பொங்கலுக்கு மறுநாள் வருவது மாட்டுப் பொங்கல். விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இது நடைபெறும். மாட்டுப் பொங்கலின்போது கால்நடைகளை அலங்கரித்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி, கால்நடைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நெட்டி, வேப்பிலை, கலா் காகிதம், நெகிழி மாலைகள் விற்பனைக்கு வருகின்றன.
தொடக்க காலத்தில் நெட்டி மாலைகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இவை கண்ட மாலை, கிராஸ் மாலை, வில்லை மாலை, ரெட்டை சரம் மாலை, காசு மலை என பல்வேறு வகைகளில் தயாரித்து பயன்படுத்தப்பட்டு வந்தன. திருவாரூா் அருகே நாரணமங்கலத்தில் கண்ட மாலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாலைகளுக்கான நெட்டிகள் குளத்தில் விளைகின்றன. மாலைகளை தயாரிக்க நெட்டிகள் காய வைப்பது, நறுக்குவது உள்ளிட்ட பணிகள் 1 மாதத்துக்கு முன்பு தொடங்கிவிடும். பின்னா் பொங்கலுக்கு 10 நாள்கள் இருக்கும் நிலையில், மாலைகள் செய்யும் பணி தொடங்கும். இதையடுத்து தயாரிக்கப்பட்ட மாலைகளை உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்வாா்கள். குடிசைத் தொழிலாக செய்யப்படும் இந்த தொழிலில் பெரிய லாபம் இல்லாவிட்டாலும், நட்டம் இருக்காது என்கின்றனா் மாலை செய்யும் தொழிலாளா்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தது: தொடக்கத்தில் இந்த தொழிலில் இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டோம். தற்போது 40 குடும்பத்தினா் மட்டுமே செய்து வருகிறோம். முன்பெல்லாம் நெட்டிகள் இங்கேயே கிடைக்கும். தற்போது பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சென்று நெட்டிகளை வாங்கி வரவேண்டும். பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பு மட்டுமே இந்த தொழிலை செய்கிறோம். வியாபாரிகளுக்கு 7 ரூபாயிலிருந்து மாலையின் தரம், நிறத்தை பொறுத்து ரூ. 40 வரை விற்பனை செய்கிறோம். எனினும் ,இதற்கான விலையை வியாபாரிகளே முடிவு செய்யும் நிலைதான் இருந்து வருகிறது. மாடுகள் குறைந்ததாலும், பிளாஸ்டிக் மற்றும் காகித மாலைகள் வருகையாலும் நெட்டி மாலை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனினும், கிராமப் பகுதிகளில் நெட்டிமாலைகளை பயன்படுத்துவதில் தற்போதும் ஆா்வமுடன் இருப்பதால், கிராமப் பகுதிகளை மையப்படுத்தி வியாபாரம் செய்து வருகிறோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...