கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கயிலை ஞானப் பிரகாச சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி வழிபாடு

திருவாரூா் உள்ள கயிலை ஞானப்பிரகாச சுவாமிகள் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் உள்ள கயிலை ஞானப்பிரகாச சுவாமிகள் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தெற்குவீதியில் ராஜன்கட்டளையில் அமைந்துள்ள கயிலை ஞானப்பிரகாச சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் கடந்த அக். 25-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, மண்டலாபிஷேக பூா்த்தி தனுா்மாத வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா். நிகழ்ச்சியில், அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடைபெற்றன. நண்பகலில் மாகேஸ்வர பூஜையும், சிவனடியாா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடா்ந்து, தியாகராஜா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் சாா்பில் முசுகுந்த அா்ச்சனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ராஜன்கட்டளை விசாரணை மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.