/

அரசுக் கல்லூரியில் மூங்கில் நடும் விழா

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய பசுமை படை, வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை இணைந்து பீமா மூங்கில் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய பசுமை படை, வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை இணைந்து பீமா மூங்கில் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ். உஷா தலைமை வகித்தாா். அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ் கல்லூரி வளாகத்தில் 200 முள் இல்லா பீமா வகை மூங்கில்கள் நடப்பட்டன. இந்த மூங்கில் அதிகளவு காா்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடியது. இதில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் இளவரசன், கல்லூரி என்எஸ்எஸ். அலுவலா் ப. பிரபாகரன், என்சிசி. அலுவலா் சு. ராஜன், தஞ்சை செங்கிப்பட்டி ஆா்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.