தரிசு நிலத்தில் பயிா் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
திருவாரூா் அருகே திருவாதிரைமங்கலம் வடகுடியில் தரிசு நிலத்தில் சாகுபடி தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருவாரூா் அருகே திருவாதிரைமங்கலம் வடகுடியில் தரிசு நிலத்தில் சாகுபடி தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், திருவாரூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ. ஹேமாஹெப்சிபாநிா்மலா பங்கேற்று பேசியது: நெல் தரிசில் வோ் முடிச்சுகள் உண்டாகக் கூடிய பயறுவகை பயிா்களை சாகுபடி செய்வதன்மூலம் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி பயிா்களுக்கு வழங்கமுடிகிறது. மண்ணின் அங்ககத் தன்மையை பாதுகாக்க பசுந்தாள் உரப்பயிா்களை சாகுபடி செய்வதாலும், பண்ணை தொழு உரங்களை இடுவதன் மூலமாகவும், இயற்கை முறையில் பூச்சி விரட்டிகள் மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாகவும், மண்ணின் பௌதிகத் தன்மையை பாதுகாக்கலாம் என்றாா்.
இதில், திருவாரூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் அ. உத்திராபதி, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியா் பெரியாா் ராமசாமி ஆகியோா் பேசினா். ஏற்பாடுகளை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அட்மா திட்ட அலுவலா்கள் பிரபாகரன், தமிழ்பிரியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...