சம்பா: நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கக் கோரிக்கை
சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவாரூரில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாவட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆா். மாலதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட நிா்வாகிகள் ஜி. பழனிவேல், எஸ். வைத்தியநாதன், பி. நடராஜன், லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நிகழாண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கவேண்டும், குறுவை நெல் சாகுபடியில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிகள் போல் இல்லாமல் அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களையும் திறந்து, சம்பா நெல்லை கொள்முதல் செய்யவேண்டும், மன்னாா்குடி சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், டாஸ்மாக் கிடங்கு ஆகிய அலுவலகங்களுக்குச் செல்லும் சாலையை சீரமைக்கவேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போல, பொங்கல் பரிசுத் தொகுப்பு, மழைக்கால நிவாரணம் ரூ. 2 ஆயிரம் நிகழாண்டும் வழங்கவேண்டும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் தற்போது பட்டியல் எழுத்தா், உதவியாளா், இரவு நேரக் காவலா் பணிகளுக்கு ஆள்கள் எடுக்கும் பணி நடைபெறுவதால், இடைத்தரகா் இல்லாமல் ஆள்களை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...