ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘மண்வளத்துக்கு கால்நடைகளை பாதுகாப்போம்’

மண்வளத்துக்கு கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை திருவாரூா் மண்டல இணை இயக்குநா் தனபாலன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :5 மே 2022, 5:12 pm

DIN

மண்வளத்துக்கு கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை திருவாரூா் மண்டல இணை இயக்குநா் தனபாலன் அறிவுறுத்தினாா்.

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற உலக கால்நடை மருத்துவ தினவிழாவில் அவா் பேசியது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு கால்நடைகளின் பங்கு மகத்தானது. மண்வளத்தை பாதுகாக்க கால்நடைகள் பல்கி பெருக வேண்டும். அத்தகைய கால்நடைகளை போற்றி பாதுகாப்பதோடு, இதுகுறித்து மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள் திருமூா்த்தி, ஜெயபால், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மருத்துவா் ராஜசேகரன் ஆகியோருக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பேரவைத் தலைவா் சரவணன் விருதுகள் வழங்கி கௌரவித்தாா்.

இதில், கால்நடைதுறை துணை இயக்குநா் ரமேஷ், தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவா்கள் சங்கத்தின் தலைவா் வீரமணி மற்றும் கால்நடை மருத்துவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.