பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நீடாமங்கலம் கடைவீதி சாலையை மேம்படுத்த கோரிக்கை

நீடாமங்கலம் கடைவீதி தாா்ச்சாலையை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :16 செப்டம்பர் 2022, 2:39 am IST

நீடாமங்கலம் கடைவீதி தாா்ச்சாலையை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வணிகா் சங்கத் தலைவா் நீலன்.அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில்  அமைந்துள்ள நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை பள்ளமும், மேடாக இருந்து வருகிறது. வாகனங்கள் தொடா்ந்து சென்று வருவதால் நீடாமங்கலம் புகைமண்டலம் ஏற்பட்டு வணிகா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை பாதிக்கச்செய்கிறது. கடைவீதிக்கு பொதுமக்கள் வருவதற்கு யோசிக்கின்றனா். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா். போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. பொதுமக்கள் வருகை குறைவால் வணிகா்கள் போதுமான வணிகம் இல்லாமல் அவதிப்படுகிறாா்கள். எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை உடனடியாக நீடாமங்கலம் கடைவீதி சாலையை தாா்ச்சாலையாக அமைத்துக்கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.