ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பிரசாரம்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 10:42 pm

Din

மன்னாா்குடி, ஆக.14: நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் சாா்பில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பிரசாரம் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில், நாட்டின் குடிமக்கள் தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுக்கவும், வீட்டில் தேசியக் கொடியை பறக்க விடவும் ‘மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி என்சிசி கப்பல் படை சாா்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். பள்ளி என்சிசி கப்பல் படை பிரிவு அலுவலா் எஸ். அன்பரசு முன்னிலை வகித்தாா்.

தாளாளா் எஸ். சேதுராமன், மாணவா்கள் அனைவருக்கும் தேசியக் கொடியை வழங்கினாா்.

தேசியக் கொடியின் அமைப்பு, வரலாறு, அரசு வாகனங்களில் தேசியக் கொடியை பயன்படுத்தும் முறை, கொடி மரியாதை ஆகியவை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.