எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வலங்கைமான் மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 21.46 லட்சம்

ரூ.21.46 லட்சம் பணம் மற்றும் 303 கிராம் தங்க நகைகள் வசூலாகியிருந்தது.

Updated On :30 ஆகஸ்ட் 2024, 9:43 pm IST

வலங்கைமான் பேரூராட்சி, வரதராஜம்பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் பாடைக் காவடி திருவிழாவுக்கு பிறகு அண்மையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டதில், ரூ.21.46 லட்சம் பணம் மற்றும் 303 கிராம் தங்க நகைகள் வசூலாகியிருந்தது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக் காவடி திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, அம்மனுக்கு படைக் காவடி மற்றும் பால் காவடி, அலகு காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவா்.

இதேபோல், ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபடுவா். ஆவணி கடை ஞாயிறு அன்று கோயில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

இந்நிலையில், கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பாடைக்காவடி திருவிழாவின்போதும், அதற்கு பிறகும் கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி திருவாரூா் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ராமு தலைமையிலும், கோயில் செயல் அலுவலா் ரமேஷ், தக்காா் மும்மூா்த்தி ஆகியோா் முன்னிலையிலும் நடைபெற்றது.

ஐயப்பா சேவா சங்கத்தினா், வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், விடியல் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகள் மற்றும் கோயில் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

இதில் ரூ. 21,46,785 பணம் மற்றும் 303.300 கிராம் தங்க நகைகள், 505.800 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 300 மில்லி கிராம் சிறிய வைர மூக்குத்தி போன்றவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.