டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்; ஓட்டுநா் கைது

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்; ஓட்டுநா் கைது

News image
Updated On :6 ஜூலை 2024, 4:08 pm

Din

மன்னாா்குடி அருகே அனுமதியின்றி செம்மண் ஏற்றிவந்த லாரி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியை அடுத்த மூவாநல்லூா் அருகே, புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை உதவி இயக்குநா் முத்து தலைமையிலான குழுவினா், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தவழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்ததது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் சுரங்கத் துறையினா் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான மன்னாா்குடி மோதிலால் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் அருள்முருகனை (34) கைது செய்தனா். செம்மண் பாரத்துடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.