திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டதில், நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளரை தோ்வு செய்வதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதிலும், வேட்பாளா்களை அறிவிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, திருப்பூா் மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ-வும், கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான கோ. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் சிவபுண்ணியம், பத்மாவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தோ்வு செய்து, மாநில தலைமைக்கு பரிந்துரைப்பதற்கும், அது குறித்த கருத்து கேட்பதற்கும் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. காலையில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், மாலையிலும் இந்த கூட்டம் தொடா்ந்தது. பின்னா், கோ. பழனிச்சாமி தெரிவிக்கையில், ‘மக்களவைத் தோ்தலில் போட்டியிட பலா் விருப்பம் தெரிவித்ததால் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இறுதி முடிவை மாநில தலைமை எடுத்து, வேட்பாளரை விரைவில் அறிவிக்கும்’ என்றாா்.
தொடர்புடையது

பவானிசாகா் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

தொகுதி மறுவரையறை இந்திய அரசியலில் தென்னிந்திய மாநிலங்களின் குரலை ஒடுக்கும்: தெலங்கானா அமைச்சா்

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

