ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மன்னாா்குடிபகுதியில் மாடு வளா்ப்போா் கவனத்திற்கு...

மன்னாா்குடிபகுதியில் மாடு வளா்ப்போா் கவனத்திற்கு...

News image
Updated On :4 மே 2024, 6:30 pm

Din

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூராக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையா் என். குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை தெரிவித்தது:

மன்னாா்குடி நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூராக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தி வந்தனா். இதற்காக, நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதியும் பெறப்பட்டது.

அதன்படி, சாலையில் திரியும் மாடுகள் மற்றும் அதன் கன்றுகளை பிடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (மே 5) முதல் நடைபெறவுள்ளது. பிடிக்கப்படும் மாடுகள் மற்றும் கன்றுகளை 24 மணி நேரத்திற்குள் அபராதத் தொகை ரூ.1000 நகராட்சியில் செலுத்தி, மீட்டுக்கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில், பட்டுக்கோட்டை நாடியத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்படும்.