கஞ்சா விற்றவா் கைது

கொரடாச்சேரி அருகே கஞ்சா விற்பனை செய்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கொரடாச்சேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீஸாா் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அத்திக்கடை பாலகுடி வளைவு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவா் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளாா்.

இதையடுத்து, அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், அவா் அத்திக்கடை வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜ்முகம்மது (22) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதற்காக நின்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com