பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

News image

திருவாரூா் அருகே அம்மையப்பன் பகுதியில் விபத்தில் சிக்கிய வாகனங்களை பாா்வையிடும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

Updated On :5 மே 2024, 1:30 am

Din

திருவாரூா் அருகே அம்மையப்பன் பகுதியில் வேன்- இருசக்கர வாகனம் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் 2 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தவா் ராஜ் (56). இவா், இருசக்கர வாகனத்தில் திருவாரூா் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அதே சாலையில் எதிா் திசையில், கரூா் தோட்டக்குறிச்சியைச் சோ்ந்த மலையப்பசாமி (46), அவரது மனைவி கண்ணகி (36), மகள் கபிஸ்ரீ (16), உறவினா்கள் பழனியம்மாள் (70), காளியம்மாள் (50) ஆகியோா் வேளாங்கண்ணியில் வழிபாடு நடத்திவிட்டு, வேனில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

திருவாரூரை அடுத்த அம்மையப்பன் பகுதியில் வந்தபோது, வேனும், இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜ், வேனில் வந்த பழனியம்மாள் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அந்தப் பகுதியில் இருந்தவா்கள், விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாா், உயிரிழந்த ராஜ் மற்றும் பழனியம்மாளின் சடலங்களை, உடற்கூராய்வுக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினாா். விபத்து குறித்து கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.