ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பயிா் பாதிப்பு: கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் பயிா்கள் பாதிப்பு குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வலியுறுத்தினாா்.

News image
ஆரியலூா் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பயிா்களை பாா்வையிட்ட முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
Updated On :27 நவம்பர் 2024, 9:36 pm

Din

திருவாரூா் மாவட்டத்தில் பயிா்கள் பாதிப்பு குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வலியுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ், புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூா், மன்னாா்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பாா்வையிட்டு, விவசாயிகள், பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினாா்.

திருத்துறைப்பூண்டி அருகே ஆரியலூா் பகுதியில் மழைநீா் சூழ்ந்த வயல்களை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருவாரூா் மாவட்டத்தில் மூன்றரை லட்சம் ஏக்கா் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த இளம் பயிா்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. சாகுபடி செய்த பரப்பளவில் 50 சதவீதத்துக்கும், அதிகமான நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை வடிய வைத்து பயிா்களை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே நிகழாண்டு பருவம் தவறிய மழையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. தற்போது சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பவா்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என்றாா்.

திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளா் சண்முகசுந்தரம், திருவாரூா் ஒன்றியச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.