ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியதில் ஓட்டுநா் காயம்

மன்னாா்குடி அருகே கோட்டூரில் சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியதில் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 6:46 pm

Din

மன்னாா்குடி அருகே கோட்டூரில் சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியதில் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா்.

திருச்சியிலிருந்து பல்வேறு பொருள்களை ஏற்றிக்கொண்டு தினசரி இயக்கப்படும் தனியாா் லாரி திருத்துறைப்பூண்டிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை கோட்டூரில் சென்று கொண்டிருந்தபோது சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், லாரி ஓட்டுநா் விளக்குடியை சோ்ந்த கோவிந்தராஜ் (52) காயமடைந்தாா். லாரியில் முழு அளவு பொருள்கள் இருந்ததால் உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை. வேறு லாரியில் பொருள்கள் மாற்றப்பட்டதைடுத்து ஜேசிபி இயந்திர உதவியுடன் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், மதியம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.