தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரயில்வே கேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்-மன்னாா்குடி ரயில் பாதையில் சம்பாவெளி ரயில்வேகேட் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:26 pm

Din

நீடாமங்கலம்-மன்னாா்குடி ரயில் பாதையில் சம்பாவெளி ரயில்வேகேட் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

நீடாமங்கலத்திலிருந்து மன்னாா்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சம்பாவெளி கிராம பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இது நீடாமங்கலம்-மன்னாா்குடி ரயில் பாதையாகும்.

மன்னாா்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக நெல் ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் செல்கின்றன.

இந்த ரயில்வேகேட் பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை காலை சுமாா் 9.30 மணியிலிருந்து மாலை வரை நடைபெற்றது. ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிக்கு ரயில்வே கேட் மூடப்பட்டதால் வாகனங்கள் மாற்று வழிகளில் இயக்கப்பட்டன.