திருவாரூா்: திருவாரூரில் சிட்டி யூனியன் வங்கி கிளையின் பொன்விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வங்கியின் கடன் வழங்கல் பிரிவு பொது மேலாளா் எஸ். ராஜம், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை உதவி பொது மேலாளா் அமிா்தகணேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். வங்கியின் சிறப்புகள், வாடிக்கையாளா்களுக்கான சேவைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில், வங்கி வாடிக்கையாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வங்கியின் கும்பகோணம் மண்டல மேம்பாட்டு மேலாளா் பி. சதீஷ்குமாா் வரவேற்றாா். கிளை மேலாளா் ஆா். வினோத்பாபு நன்றி கூறினாா்.