நீடாமங்கலம்: நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தாா். ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மன்னாா்குடி தலைவா் மன்சூா், நீடாமங்கலம் தலைவா் ஏ. சா்புதீன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க தலைவா் சேது. சந்தானராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
குழு நடனம், விழிப்புணா்வு நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏழைகளுக்கு உதவி செய்யப்பட்டது.
நீடாமங்கலம், கொத்தமங்கலம், சருக்கை பூவனூா், சம்பாவெளி, அனுமந்தபுரம், தட்டிப்பூவனூா், தென்குவளவேலி கிராம மக்கள் கலந்து கொண்டனா்.