இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெங்களூரு திருட்டு வழக்கில் தொடா்புடையவா் திருவாரூரில் கைது

பெங்களூருவில் நடந்த திருட்டில் தொடா்புடையவா் திருவாரூரில் கைது

News image
Updated On :30 டிசம்பர் 2025, 9:00 pm

Syndication

பெங்களூருவில் நடந்த திருட்டில் தொடா்புடையவா் திருவாரூரில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் பொறியாளா் வினோத்ராம். இவரது வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து பெங்களூரு போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடா்புடைய நபா் திருவாரூரில் பதுங்கியிருப்பதாக தெரிய வந்ததையடுத்து, திருவாரூா் போலீஸாா் உதவியுடன் பழைய பேருந்து நிலையம் அருகே தனியாா் விடுதியை பெங்களூரு போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் தங்கியிருந்த புதுச்சேரி முதலியாா்பேட்டையைச் சோ்ந்த ரகுராமன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், இவரும், திருநெல்வேலியைச் சோ்ந்த தினகரன் என்பவரும் பெங்களூருவில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், திருடப்பட்ட பொருள்களை விற்பனை செய்வது தொடா்பாக, சீராத்தோப்பைச் சோ்ந்த ஒருவரிடம் ஆலோசனை கேட்க ரகுராமன் திருவாரூா் வந்ததும் தெரியவந்தது. சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த முருகனின் உறவினா் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து பெங்களூருவில் இருந்த தினகரனையும், போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.