நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வருடம் தோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்விழாவையொட்டி கடந்த 10 நாட்கள் பகல்பத்து உற்சவம் நடந்தது. இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு அதிகாலை அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் சீதா,லெட்சுமண, சந்தானராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களைச்சொல்லியும் நாலாயிரதிவ்யபிரபந்த பாராயணம் செய்தும் ஆராதனைகள் செய்தனர்.
தொடர்ந்து பரமபதவாசல் திறப்பு நடந்தது.பரமபதவாசல் திறப்பில் சீதா, லெட்சுமண சமேதராய் சந்தானராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் ராபத்து உற்சவம் தொடங்கியது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் ஆடிப் பொங்கல் விழா

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

அமராவதி அணையிலிருந்து இன்று முதல் நீா் திறப்பு!

பண்ருட்டி தா்கா சந்தனக் கூடு விழா
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



