இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

நீடாமங்கலம் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

நீடாமங்கலம் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக மயிலாடுதுறைக்கு செவ்வாய்க்கிழமை பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்ததது. அப்போது, சம்பாவெளி எனும் இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மனைவி மூதாட்டி ரெங்கநாயகி (70) தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த, தஞ்சாவூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.