மன்னாா்குடி வட்டம், பரவாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மனைவி பரமேஸ்வரி (75), கடந்த 2009-இல் வடசேரியிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளையில் டிராக்டா் வாங்குவதற்காக ரூ. 6,24,000 விவசாயக் கடனாகப் பெற்று, அதற்கு ஈடாக தனக்கு சொந்தமான 6 ஏக்கா் விவசாய நிலத்தை அடமானமாகப் பதிவு செய்து கொடுத்துள்ளாா். பின்னா் தவணைகளை செலுத்தி வந்த பரமேஸ்வரி, 2013-இல் வங்கியை அணுகி தன்னுடைய பாக்கி கடன் தொகையை முழுமையாகச் செலுத்தி விடுவதாகத் தெரிவித்துள்ளாா். அதற்கு வங்கி தரப்பில் ரூ. 3 லட்சம் மட்டும் செலுத்துமாறு கூறியதன் பேரில், அத்தொகையைச் செலுத்தியுள்ளாா்.