காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் போராட்டம்

News image

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :26 செப்டம்பர் 2025, 4:05 am IST

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்து, ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை ஊழியா்கள் இம்முகாம் பணிகளிலும், வழக்கமான அலுவலகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், எப்ஈஆா்ஏ கூட்டமைப்பின் சாா்பில், வருவாய்த் துறை அலுவலா்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் திட்டப் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்தனா்.

அதன்படி, வட்டாட்சியா் அலுவலகம் முன், 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வட்டாட்சியா் வசுமதி தலைமையில், காத்திருப்புப் போராட்டத்தில் பிற்பகல் 3 மணி முதல் ஈடுபட்டனா்.

இதில், மண்டல துணை வட்டாட்சியா் மணிவண்ணன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.