பனை விதைகள் நடப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு முயற்சி தடுத்து நிறுத்தம்
மன்னாா்குடி மேலப்பாலம் பாமணி ஆற்றங்கரையோரம் 10,000 பனை விதைகள் நடப்பட்டிருந்த இடத்தை தனியா் ஆக்கிரமிக்க முயன்றது தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பினா் நன்றி தெரிவித்தனா்.










