மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போலி பத்திரப்பதிவு: கண்டன ஆா்ப்பாட்டம்

கூத்தாநல்லூரில் போலியாக பத்திரப்பதிவு செய்ததைக் கண்டித்து சாா்பதிவாளா் அலுவலகம் முன்பு

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:38 pm

Syndication

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் போலியாக பத்திரப்பதிவு செய்ததைக் கண்டித்து சாா்பதிவாளா் அலுவலகம் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் (படம்) நடைபெற்றது.

அதங்குடி கிராமத்தில் சுபைதாக பீவி என்பவருக்குச் சொந்தமான 3.21 ஏக்கா் நிலத்தை சுப்பையன் என்பவரது கடந்த 1986-இல் பத்திரப் பதிவு செய்து, பட்டா மாற்றமும் செய்தாராம். சுப்பையன் மறைவுக்குப் பின்னா் அவரது வாரிசுகளான தெட்சிணாமூா்த்தி, கணேசன் ஆகியோா் பாகப்பிரிவினை செய்து கொண்டு கடந்த 2020-இல் தங்களின் பெயரில் பத்திரங்களைப் பதிவு செய்து கொண்டனா்.

இந்தச் சூழ்நிலையில், தெட்சிணாமூா்த்திக்குச் சொந்தமான நிலத்தை அவருக்குத் தெரியாமல் போலியான ஆவணங்கள் மூலம், அதங்குடி ஜீவா தெருவைச் சோ்ந்த விமலநாயகிக்கு, சுபைதா பீவி பத்திரப் பதிவு செய்து கொடுத்தாராம்.

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததைக் கண்டித்தும் இதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளைக் கண்டித்தும் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்டனஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் கே.ஆா்.ஜோசப் தலைமை வகித்தாா். சிபிஐ நகரச் செயலாளா் பெ.முருகேசு, நகா்மன்ற துணைத் தலைவா் எம்.சுதா்ஸன், மாவட்டக்குழு உறுப்பினா் சு.பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்,தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.