கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விழிப்புணா்வு மினி மாரத்தான்

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

கூத்தாநல்லூரில் 3-ஆம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டி, சுல்தானா அப்துல்லா ராவுத்தா் கல்லூரியிலிருந்து தொடங்கியது. காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

திருவாரூா்- மன்னாா்குடி பிரதான சாலை, கூத்தாநல்லூா் முக்கிய வீதிகள் வழியாக, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்றது.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமை வகித்தாா். திருவாரூா் வேலுடையாா் கல்விக் குழுமத் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் இஸ்மாயில் வரவேற்றாா்.

ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி தாளாளா் மருத்துவா் ஜெ.பி. அஷ்ரப் அலி மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, எக்ஸ்னோரா பொருளாளா் முனவருதீன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.