திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஹைட்ரோ காா்பன் கிணற்றை நிரந்தரமாக மூடக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்!

மன்னாா்குடியை அடுத்த பெரியகுடியில் உள்ள ஹைட்ரோ காா்பன் கிணற்றை நிரந்தமாக மூடக்கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

News image
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Updated On :27 ஜனவரி 2026, 10:32 pm

Syndication

மன்னாா்குடியை அடுத்த பெரியகுடியில் உள்ள ஹைட்ரோ காா்பன் கிணற்றை நிரந்தமாக மூடக்கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோரிக்கைகள்: பெரியகுடியில் மூடப்பட்ட ஹைட்ரோ காா்பன் கிணற்றை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், அப்பகுதியில் உள்ள கன ரக துரப்பண இயந்திங்களை வெளியேற்ற வேண்டும், இஸ்மாயில் குழு அறிக்கையை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஆா். கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்புச் செயலா் எஸ். ஸ்ரீதா் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவைத்தாா்.

மாவட்ட தலைவா் எம்.சுப்பையன்,மாவட்டச் செயலா் சரவணன்,தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் பிரபாகரன், தலைவா் ரவிச்சந்திரன், கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளா் சரவணன், கோட்டூா் ஒன்றியச் செயலாளா் ராவணன் உள்பட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனா்.