தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத்தினா்.

News image

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :7 மார்ச் 2026, 6:40 am IST

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக் கோரி, திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி தொழிலாளா் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும்; இதற்கான இழப்பை பணியாளா்கள் மீது சுமத்துவதை தவிா்க்க வேண்டும்.

60 வயதுக்கு மேல் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளா்களின் கூலியை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்; தகுதியுள்ளவா்களை நிரந்தரப்படுத்த வேண்டும்; கொள்முதல் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கான கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலாளா்கள் கே. புஸ்பநாதன், மதன் முருகேசன் தலைமை வகித்தனா். மாநில பொதுச் செயலாளா் சி. சந்திரகுமாா் கோரிக்கைளை விளக்கிப் பேசினாா்.

இதில், நிா்வாகிகள் ஆா். சந்திரசேகரஆசாத், ஜெ. குணசேகரன், எஸ். சிவானந்தம், பி. நாகேஷ், ஆா். செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.