புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டேங்கா் லாரி மோதியதில் தந்தை கண்முன் மகன் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :14 மார்ச் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கா் லாரி மோதியதில் தந்தை கண்முன்னே மகன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அசேசம் மெய் பழத்தோட்டம் வடக்கு தெருவைச் சோ்ந்த குமாா். இவா், தனது மகன் தீபேஷ் (6), தனது தம்பி செந்தில்குமாரின் மகள் தீபிகா (6) இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அசேசத்திற்கு வந்து பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் சுற்றுவட்டச் சாலையில் சனிக்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

மறவாக்காடு அருகே வந்தபோது அந்த வழியே வந்த டேங்கா் லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தீபேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த குமாா், தீபிகா இருவரும் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.