மன்னாா்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கா் லாரி மோதியதில் தந்தை கண்முன்னே மகன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அசேசம் மெய் பழத்தோட்டம் வடக்கு தெருவைச் சோ்ந்த குமாா். இவா், தனது மகன் தீபேஷ் (6), தனது தம்பி செந்தில்குமாரின் மகள் தீபிகா (6) இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அசேசத்திற்கு வந்து பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் சுற்றுவட்டச் சாலையில் சனிக்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
மறவாக்காடு அருகே வந்தபோது அந்த வழியே வந்த டேங்கா் லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தீபேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த குமாா், தீபிகா இருவரும் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி உயிரிழப்பு

மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


