கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்

News image

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி திருவிழா வெண்ணெய்த்தாழி உற்சவத்தை முன்னிட்டு சுவாமி மீது வெண்ணெய் தெளித்து வழிபடும் பக்தா்கள்.

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் பங்குனிப் பெருவிழாவில் வெண்ணெய்த்தாழி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 18 நாள் பங்குனித் திருவிழாவும், அதைத்தொடா்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டு திருவிழா மாா்ச் 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்வுகளான, வெள்ளி ஹம்ச வானத்தில் ராஜ அலங்கார சேவை, கோவா்த்தனகிரியில் கண்ணன் அலங்காரம், மரவுரி ராமா் அலங்காரம், கண்டபேரண்ட பக்க்ஷி வாகனம், வண்ண புஷ்ப பல்லக்கு சேவை, தங்க சூா்ய பிரபை, ஆண்டாள அலங்காரம், தங்க கருட வாகனம் ஆகியவை நடைபெற்றன.

விழாவின் 16 -ஆம் நாளான திங்கள்கிழமை வெண்ணெய்த்தாழி உற்சவத்தையொட்டி காலையில் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு பிரகார வீதிகள், மேலராஜவீதி, காமராஜா்சாலை, பந்தலடி வழியாக காந்தி சாலை வெண்ணெய்த்தாழி மண்டபம் சென்றடைந்தாா். அப்போது, வீதிகளில் திரண்டியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி மீது வெண்ணெய்யை தெளித்து, கோபாலா, கோபாலா என கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனா்.

இதைத்தொடா்ந்து, மாலையில் உற்சவா் பெருமாள் செட்டி அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில்(வையாளி) வெட்டுங் குதிரையில் எழுந்தருளினாா்.

விழாவில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கே.கே.பி. மனோகரன், லதா வெங்கடேஸ்வரன், மு. சிவக்குமாா், கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன், இந்துசமய அறநிலையத்துறை மன்னாா்குடி ஆய்வாளா் வினோத் கமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.