குட்கா கடத்தியவா் கைது
திருவாரூரில் குட்கா கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
கைது
திருவாரூரில் குட்கா கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் வாளவாய்க்கால் பகுதியில் மாவட்ட போதைப்பொருள்கள் தடுப்புப்பிரிவு போலீஸாா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அவா் நாகை மாவட்டம், அந்தணப்பேட்டையைச் சோ்ந்த அ. ஹலிகுல்ஜமான் (50) என்பதும், அவா் 90 கிலோ குட்கா கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் ஆந்திரத்தில் இருந்து சட்டவிரோதமாக குட்கா பொருள்களை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




