விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குழந்தைகளிடம் பண்பாட்டை வளர்க்க பள்ளிகளில் நீதிபோதனை அவசியம்

புது தில்லி, செப்.14:    குழந்தைகளிடம் பண்பாடு, கலாசாரத்தை வளர்ப்பதற்குப் பள்ளிகளில் நீதிபோதனை அவசியம் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.    புது தில்லிக்கு வருகை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:25 am

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி, செப்.14:    குழந்தைகளிடம் பண்பாடு, கலாசாரத்தை வளர்ப்பதற்குப் பள்ளிகளில் நீதிபோதனை அவசியம் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

   புது தில்லிக்கு வருகை தந்துள்ள அவர், ராமகிருஷ்ணாபுரம் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் எதிரே உள்ள அருள்மிகு தேவி காமாட்சி அம்மன் கோயிலில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

   "தினமணி' நிருபரிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:

  இளைய தலைமுறையினரிடம் தேசத்தின் பண்பாடு, கலாசாரம், கலைகள் தொடர்பான விஷயங்களைப் பயிற்றுவிப்பதைப் பெரியவர்கள் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.

   பண்பாட்டைப் பேணும் சமுதாயமுமே சிறந்த சமுதாயமாக இருக்க முடியும். குழந்தைகளிடம் தேசத்தின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துக் கூற வேண்டும்.

  நாங்கள் சிறு வயதில் இருந்தபோது பள்ளிகளில் நன்னெறி கற்றுத் தரப்பட்டது. அதுபோன்ற விஷயங்கள்தான் இன்றைய தலைமுறையினரை சிறந்தவர்களாக உருவாக்க உதவிடும்.

   காஞ்சிமடம் சார்பில் அறநெறிக் கதைகள், கருத்துகள் அடங்கிய நூல்கள் ஆங்கிலம், தமிழில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

   காஞ்சி மடத்தைத் தொடர்புகொண்டால் பள்ளிகளுக்கு அவற்றை இலவசமாக வழங்கத் தயாராக இருக்கிறோம்.

   மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பள்ளிகளில் கீதை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுபோன்ற அளவுக்கு இல்லாவிட்டாலும் நீதிபோதனையை பள்ளிகளில் அவசியம் பயிற்றுவிக்க வேண்டும். அவைதான் குழந்தைகளைப் பண்பட்டவர்களாக மாற்றும்.

   மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்ட முன்வடிவு நாட்டுக்கு ஆபத்தானது.

  நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தபோது பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்க்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது அது போன்ற நிலை இல்லை. எல்லோரையும் சமத்துவமாகவே பார்க்க வேண்டும். நம்முடைய சமுதாயத்தில் பெரும்பான்மையோரில் ஏழைகள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கச் செய்வது அவசியம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.