ஐனக்புரி டி.டி.இ.ஏ. பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
மண்டல விளையாட்டுப் போட்டிகளில் தில்லி தமிழ் கல்விக் கழக (டி.டி.இ.ஏ.) பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்று பரிசுகளை வென்றனர்.


மண்டல விளையாட்டுப் போட்டிகளில் தில்லி தமிழ் கல்விக் கழக (டி.டி.இ.ஏ.) பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்று பரிசுகளை வென்றனர்.
தில்லி 18-ஆம் மண்டலத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் டிடிஇஏ ஜனக்புரி பள்ளி உள்பட 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகள் தில்லி விகாஸ்புரியில் உள்ள இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் நிறுவனத்தால் நடத்தப்பட்டது.
ஜூனியர் பிரிவு மாணவிகளுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மாணவிகள் ரேவதி, பூஜா, ரம்யா, ரேணுகா (9-ஆம் வகுப்பு) ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். 800 மீட்டர் ஓட்டத்தில் ரம்யா இரண்டாம் பரிசு பெற்றார்.
சீனியர் பிரிவுக்கான ஓட்டப் பந்தயத்தில் சிம்ரன் (11- ஆம் வகுப்பு) இரண்டாம் பரிசு பெற்றார். போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...