ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தில்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் ரூ.51 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

தில்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகளிடமிருந்து ரூ.51 லட்சம் பெறுமானமுள்ள வெளிநாட்டு அன்னியச் செலாவணியை

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:36 pm

DIN

புது தில்லி: தில்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகளிடமிருந்து ரூ.51 லட்சம் பெறுமானமுள்ள வெளிநாட்டு அன்னியச் செலாவணியை கைப்பற்றி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்(சிஐஎஸ்எஃப்) மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் 3 -ஆம் முனையத்தில் திங்கள்கிழமை துபாயிலிருந்து விமானத்தில் இறங்கிய தாரிக் ஆஸாம் என்கிற இந்திய பயணியின் பையில் சந்தேகத்திடமாக பொருட்கள் இருக்க அவரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அதில் ரூ.19.61 லட்சம் பெறுமானமுள்ள ஒரு லட்சம் சௌதி ரியால்ஸ் கரன்ஸி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த சௌதி கரன்சிக்கு போதுமான ஆவணங்கள் இல்லாததால் தாரிக் ஆஸாமிடமிருந்த அன்னியச் செலாவணி கரன்ஸிகள் கைப்பற்றப்பட்டு மேற்கொண்டு விசாரணைக்கு சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதே மாதிரி ஷாா்ஜாவிருந்து ஹைதராபாத் விமான நிலையத்தில் இறங்கிய சராா் ஹான்(29) என்கிற பயணியும் திங்கள்கிழமை பிடிபட்டாா். இவரிடம் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள அன்னியச் செலாவணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமான நிலைய பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் இந்த நபா் பிடிபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். அனுமதியின்றி கடத்திக்கொண்டு வரப்பட்ட ரூ. 51 லட்சம் மதிப்புள்ள இரு அன்னியச்செலவாணி விவகாரங்கள் குறித்தும் மேற்கொண்டு விசாரணைக்கு சுங்க இலாகா துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.