போலி விமான டிக்கெட் மூலம் தில்லி விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையப் பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது:
சம்பவத்தன்று, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியில்லாத பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பி.எஸ். பிர்டி என்பதும், போலி விமான டிக்கெட் மூலம் விமான முனையத்திற்குள் நுழைந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் செல்லும் தனது மனைவியைப் பார்ப்பதற்காக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை பயன்படுத்தி விமான நிலையத்திற்குள் நுழைந்ததாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவர் தில்லி காவல் துறையினரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். விமானப் போக்குவரத்து விதிகளின்படி செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் விமான முனையப் பகுதிக்குள் நுழைவது சட்டவிரோதமாகும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!

இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

