தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் உலகப் பாரம்பரிய தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, டிடிஇஏ செயலர் ஆர்.ராஜுவின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து டிடிஇஏ பள்ளிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் உரை இடம் பெற்றது. "பாரம்பரிய சின்னங்களைப் காப்போம்' என மாணவர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
மோதி பாக், மந்திர் மார்க் பள்ளிகளில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. மேலும், மாணவர்கள் தயாரித்த தில்லி செங்கோட்டை, குதூப்மினார், தாஜ்மஹால் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகள் நிகழ்ச்சியின் போது காட்சிப்படுத்தப்பட்டன.
அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர்கள் ராஜி கமலாசணன் (ஜனக்புரி), காயத்ரி (மந்திர் மார்க்), மீனா சகானி ( லக்ஷ்மிபாய் நகர்), உமா ரவி (லோதி எஸ்டேட்), சித்ரா வாசகம் (ராமகிருஷ்ணாபுரம்), ஹரிகிருஷ்ணன் (மோதி பாக்), சித்ரா ராதாகிருஷ்ணன் (பூசா சாலை பள்ளி) ஆகியோர் பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதன் அவசியம், கலாசாரத்தை மதிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








