ஆம் ஆத்மி தலைமையகம் முன் மேயா்கள், கவுன்சிலா்கள் போராட்டம்
மாநகராட்சிகளுக்கு நிலுவை நிதியை உடனடியாக வழங்கக் கோரி, தில்லி டிடியு மாா்க்கில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகம் முன் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் செவ்வாய்க்கிழமை சத்யாக்கிரக போராட்டம் நடத்தினா்.










