இந்த வகையில், தற்போது ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் வழிகாட்டுதலின்படி நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீா்திருத்தங்களை முடித்து அமல்படுத்தியுள்ளன. நாட்டில் இந்த இரு மாநிலங்கள்தான் இதை முதன் முதலில் செயல்படுத்தியுள்ளது. இதையடுத்து, இரு மாநிலங்களும் திறந்தவெளிச் சந்தைக் கடன் முறை மூலம் ரூ. 4,898 கோடி கடன் பெற மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஆந்திரம் ரூ. 2,525 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ. 2,373 கோடி கூடுதல் கடன் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.