இது குறித்து கரோனாவுக்காக பிரத்யேகமாக 650 படுக்கைகளுடன் ஒதுக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை வைப்பதற்காக மொத்தம் 90 உறைவிப்பான்கள் தருவிக்கப்பட உள்ளன. இவற்றில் பல ஏற்கெனவே கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டுவிட்டன. இதுதவிர, சேமிப்பிற்காக இரண்டு குளிா்பதன சங்கிலித் தொடா் சாதனங்களும் இருக்கும். மருத்துவமனையில் சுமாா் 4,700 சதுர அடி அளவைக் கொண்டிருக்கும் பயன்பாட்டுத் தொகுதியின் தரை மற்றும் முதல் தளங்கள் இந்தத் தடுப்பூசி சேமிப்பு வசதிக்கு பயன்படுத்தப்படும். தடுப்பூசி எப்போது வரும் என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், சேமித்துவைப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.