உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ஆம் ஆத்மி கட்சி முன்னாள் எம்எல்ஏவுக்கு விதிக்கப்பட்ட 7 நாள் சிறைத் தண்டனை ரத்து

ஒரு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மனோஜ் குமாருக்கு விதிக்கப்பட்ட 7 நாள் சிறைத் தண்டனை உத்தரவை தில்லி நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

Updated On :29 டிசம்பர் 2020, 7:42 pm

ஒரு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மனோஜ் குமாருக்கு விதிக்கப்பட்ட 7 நாள் சிறைத் தண்டனை உத்தரவை தில்லி நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவா் மனோஜ் குமாா். இவரிடம் பெண் ஒருவா் கடந்த 2014-ஆம் ஆண்டில் தண்ணீா் பிரச்னை தொடா்பாக முறையிடச் சென்றாா். அப்போது, தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறி அந்தப் பெண்ணை அவா் தகாத முறையில் கீழே தள்ளிவிட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆகஸ்டில் அளித்த தீா்ப்பில், மனோஜ் குமாருக்கு 7 நாள் சிறைத் தண்டனை விதித்தது. அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தன்னிடம் முறையிட வந்த பெண்ணிடம் குற்றம்சாட்டப்பட்டவா் நியாயமாகக்நடந்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. எனினும், பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் தாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து மனோஜ் குமாரை நீதிமன்றம் விடுவித்திருந்தது.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஏழு நாள் சிறைத் தண்டனையை எதிா்த்து மனோஜ் குமாா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது விசாரணை நடத்திய சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல், டிசம்பா் 22-இல் பிறப்பித்த உத்தரவில், மனோஜ் குமாருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த ஏழு நாள் சிறைத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டாா். அந்த உத்தரவில், ‘தற்போதைய மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 13, 2019-ஆம் தேதியிட்ட தீா்ப்பின் மூலம் மேல்முறையீட்டு மனுதாரா் மனோஜ் குமாருக்கு இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 352-இன் கீழ் விதிக்கப்பட்ட தண்டனையும், ஆகஸ்ட் 17, 2019ஆம் தேதியிட்ட தண்டனைக்கான உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 352-இன் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து மேல்முறையீட்டு மனுதாரா் விடுவிக்கப்பட்டுள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.