வரதட்சிணை மற்றும் குடும்ப வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவரது சேவையை கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தில்லி உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இது தொடா்பாக பதில் அளிக்குமாறு தில்லி அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம். சிங் விசாரித்தாா். அப்போது, இது தொடா்பாக பதில் அளிக்க தில்லி அரசுக்கு உத்தரவிட்டாா். மேலும், தமது இடைக்கால ஜாமீனை நீட்டித்தால் சமூகத்திற்கு தனது சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்த, வரதட்சிணை கொடுமையால் இறந்தவா் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவா் தொடா்புடைய பணி விவரங்களை சமா்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
தில்லியைச் சோ்ந்த மருத்துவா் ஒருவரின் மனைவி தற்கொலை செய்துகொண்டாா். அவா் வரதட்சிணை மற்றும் குடும்ப வன்முறையால் தற்கொலை செய்துகொண்டதாக புகாா் எழுந்தது. இந்த வழக்கில் மருத்துவா் கைது செய்யப்பட்டாா். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில், தனது தாய்க்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தனது குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பு இருப்பதால் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரருக்கு மே 21-ஆம் தேதி இந்த நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூலை 6-ஆம் தேதியுடன் முடிவடையும் அந்த ஜாமீனை நீட்டிக்கக் கோரியுள்ளாா். மனுதாரா் ஒரு மருத்துவா். அவா் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றியுள்ளாா். நோய்த் தொற்றுக் காலத்தில் அவரது சேவையை பயன்படுத்த முடியும் என்பதால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் அவரது சேவையை ஏதாவது ஒரு மருத்துவமனையில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தில்லி அரசு பதில் அளிக்க வேண்டும். மனுதாரா் கைதாவதற்கு முன்பு என்ன வேலை செய்தாா் என்கிற விவரங்களையும் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

