மூன்று தில்லி காவல்துறை மாவட்டங்களிலும் கடந்த மாதம் கலால் சட்டத்தின் கீழ் மொத்தம் 69 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், வடக்கு மாவட்டத்தில் 16 பேரும், வட மேற்கு மாவட்டத்தில் 44 பேரும், வடகிழக்கு மாவட்டத்தில் 9 பேரும் இடம் பெற்றுள்ளனா். வடகிழக்கு மாவட்டத்தில் கலால் சட்டத்தின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,085 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, வட மேற்கு மாவட்டத்தில் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,039 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு மாவட்டத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 502 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.