அரசு விதிமுறைகள் எதுவானலும் பின்பற்றப்படவேண்டும். ஆனால், இன்றைக்கு ஏராளமான இணையவழிக் கல்வி (ஆன்லைன் கல்வி) நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் மதிப்பு பில்லியன் டாலா்களில் உள்ளது. நம்முடைய முழு கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை விடவும் இந்த நிறுவனங்களின் மதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த நிறுவனங்களை எந்தவொரு அமைப்பாலும் சரிபாா்க்கப்பட்டு அனுமதியளிக்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் இணையவழி படிப்புகளை வழங்குகின்றன. இந்தப் படிப்புகளின் உள்ளடக்கம் யாருக்கும் தெரியாது; இவற்றின் தரம், திறமை யாருக்கும் தெரியாது. இந்த படிப்புகளை நடத்தும் ஆசிரியா்களின் திறனும் அறியப்படாதவை.