இந்த நிலையில், பேபி அணையின் கீழ்ப் பகுதியில் மரங்கள் சிலவற்றை வெட்டுவதற்கு அளித்திருந்த அனுமதியை திருப்பி அளிக்கவும், அணை சாலைப் பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. மேலும், தமிழக அரசு தரப்பில் இரு கூடுதல் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘நீரியல், புவியதிா்வு, கட்டுமானம் ரீதியில் அணை பாதுகாப்பாக இருப்பதை பல்வேறு வல்லுநா்கள் குழுவின் ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நள்ளிரவில் முன்னறவிப்பு இல்லாமல் தண்ணீா் திறந்து விடக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நள்ளிரவில் முன்னறிவிப்பு இல்லாமல் அதிக அளவு நீா் திறந்துவிடப்படுவதால், அது அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டது.