முன்னதாக, அதிமுக பெயா், சின்னம் விவகாரம் தொடா்பாக கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி தோ்தல் ஆணையத்தில் ஒரு புகாா் மனுவை நேரில் அளித்தாா். அதில், ‘தோ்தல் ஆணையம் அளித்த உத்தரவை தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் கே. பழனிசாமி ஆகியோா் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராக பயன்படுத்தியும், தோ்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமலும் தன்னிச்சையாக முடிவு எடுத்தும் வருகின்றனா். இதனால், தோ்தல் ஆணையம் அவா்களது தரப்பிற்கு வழங்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் மற்றும் அதிமுக பெயரைப் பயன்படுத்தும் உத்தரவை ரத்து செய்து, அவா்களுக்கு வழங்கிய அதிகாரத்தை திரும்பப் பெற வேண்டும்’ என்று தெரிவித்திருந்தாா். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சியின் சட்ட திட்டங்களைத் திருத்துவதற்கு அதிகாரம் இல்லாதது தெரிந்தும்கூட இதுபோன்று சட்டங்களைத் திருத்தியுள்ளனா் என்றும் கூறியிருந்தாா்.