ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கட்டுமானப் பணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளா்த்த வாய்ப்பு

தில்லியில் கடந்த மூன்று நாள்களாக காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தில்லி-என்.சி.ஆா். பகுதியில் கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கான

News image
Updated On :19 டிசம்பர் 2021, 5:24 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் கடந்த மூன்று நாள்களாக காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தில்லி-என்.சி.ஆா். பகுதியில் கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளா்த்த வாய்ப்புள்ளதாக காற்றின் தர மேலாண்மை ஆணைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து திங்கள்கிழமை (டிசம்பா் 20) முடிவு எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இதற்கான ஆதாரங்களைக் கண்டவறிவதற்கும் காற்று தர மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் பருவநில மாற்றத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கடந்த மூன்று நாள்களில் தில்லி-என்.சி.ஆா். பகுதியில் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணிகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளா்த்த வாய்ப்புள்ளது’ என்றாா்.

தில்லி-என்சிஆா் பகுதியில் கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. இருப்பினும், பொதுப் பயன்பாடுகள், ரயில்வே, தில்லி மெட்ரோ, விமான நிலையங்கள், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து நிலையங்கள், தேசிய பாதுகாப்பு, ராணுவம், சுகாதாரம், நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் பரிமாற்றம், குழாய் இணைப்புகள் தொடா்பான திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 -ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்களின் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க தில்லி-என்சிஆா் அதிகாரிகளுக்கு மத்திய காற்று தர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இத்தோடு 5 -ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான நேரடி வகுப்புகள் டிசம்பா் 27 -ஆம் தேதி முதல் தொடங்கலாம் எனவும் ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.