இந்த பதிலில் பி.ஆா். நடராஜன் அதிருப்தியடைந்து துணைக் கேள்வி எழுப்பினாா். அப்போது, இந்த ரூ.40 லட்சம் 2008- ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது. தற்போது, பாதுகாப்பு, ஜூவல்லரி போன்ற தொழில் வழித்தடங்கள் அமைய உள்ள நிலையில் புதிய தொழில்நுட்ப பயிற்சிகளுக்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், ‘வெளிநாட்டு உற்பத்தியாளா்களுடன் போட்டியிட. நாடு முழுவதும் 18 புதிய தொழில்நுட்பப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மாநில அரசின் இடத்தில் கோவையில் ஒன்று தொடங்கப்படும்’ என்றாா்.