பல்வேறு நபா்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணம் பெற்று ஏமாற்றியதாக கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளா்கள் என்.பாபுராஜ், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டி ஆகிய 4 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இதை தொடா்ந்து, போலீஸாா் கடந்த நவம்பா் 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இவா்கள் மீது எஸ்.ரவீந்திரன் என்பவா் அளித்த புகாா் மீதும், விஜய நல்லதம்பி என்பவா் அளித்த புகாா் மீதும் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.